கிழக்கு உக்ரைன் -லுஹான்ஸ் பிராந்தியத்தில் பல வாரங்களாக கடும் சண்டை இடம்பெற்றுவரும் முக்கிய போர்க்கள நகரமான சீவிரோடோனெட்ஸில் தங்கள் நிலைகளைக் கைவிட்டு பின்வாங்குமாறு உக்ரேனிய படைகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சீவிரோடோனெட்ஸ் நகரில் இருந்து 5 கி.மீற்றருக்கும் குறைவான தூரத்தில் நிலைகொண்டுள்ள ரஷ்யப் படைகள் உக்ரேனியப் படைகளை சுற்றிவளைக்க முயன்று வருகின்றன. இங்கு உக்ரைன் தரப்பில் கடுமையான இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் மேலும் உயிரிழப்பு எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் படைகளை மீண்டும் ஒருங்கிணைக்கவும் ஏவுவாக சீவிரோடோனெட்ஸ்கிலிருந்து பின்வாங்கி வெளியேறுமாறு உக்ரேனிய படைத் தலைமை உத்தரவிட்டுள்ளது.
சீவிரோடோனெட்ஸ்கிலிருந்து உக்ரேனியப் படைகள் வெளியேறுவது ரஷ்யாவால் குறிப்பிடத்தக்க வெற்றியாகக் கருதப்படும்.
உக்கிர குண்டுவீச்சுக்களுக்கு உள்ளான கிழக்கு நகரத்தில் தொடர்ந்தும் படைகள் நிலைகொண்டிருப்பது பாதுகாப்பற்றது என்று உக்ரைன் அதிகாரிகள் கூறினர். இந்த நகரத்தில் உள்ள இரசாயன ஆலையில் படைகளுடன் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் சிக்கியுள்ளனர்.
சீவிரோடோனெட்ஸ்கில் உள்ள உக்ரேனிய துருப்புக்கள் பின்வாங்கி புதிய நிலைகளுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக லுஹான்ஸ்க் பிராந்திய ஆளுநர் செர்ஹி கெய்டாய் உறுதி செய்துள்ளார்.
சீவிரோடோனெட்ஸ்கில் இருந்து வெளியேறுவது தெற்கு துறைமுகமான மரியுபோலை இழந்தத பின்னர் உக்ரைனுக்கு கிடைத்த மற்றொரு பெரிய தோல்வியாகக் கருதப்படுகிறது.